மலேசிய சர்வதேச விமான நிலையத்தில் தமிழில் அறிவிப்புக்கள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் காங் ஷோ ஹா தெரிவித்துள்ளார். |
மலேசியாவில் அனைத்து சமூக மக்களும் வசித்து வருவதால் அவர்களின் தரம் குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தமிழில் அறிவிப்புக்கள் அடுத்த ஆண்டு(2012) முதல் நடைமுறைக்கு வருவதாகவும் காங் ஷோ ஹா தெரிவித்துள்ளார். மலேசியாவில் வசிக்கும் 27 மில்லியன் மக்களில் 8 சதவீதத்தினர் தமிழர்களாக உள்ளனர். மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்களாக உள்ளனர். இங்கு பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களாக உள்ளனர். சென்னை உட்பட இந்திய நகரங்களில் இருந்து வருபவர்களுக்கு ஆங்கிலம் தெரியாத காரணத்திற்காக பொதுமக்களின் கோரிக்கைகளின் பேரில் தமிழில் அறிவிப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் மலேசியா போக்குவரத்து துறை அமைச்சர் காங் ஷோ ஹா தெரிவித்துள்ளார். |
(எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு) தமிழ் இன்று அதன் எல்லைகளைத் தாண்டி கண்டங்களையும் கடல்களையும் தாண்டி தேசங்களைக் கடந்த தேசியமாக பர்ணமித்துள்ளது.... நாம் எங்கும் சிறகுடன் பறந்தாலும் தமிழுக்கென, தமிழருக்கென ஒரு நாடு மலர்ந்திட காலம்தோறும், தேசம்தோறும் தமிழ்செய்வோம்.அந்த வரிசையில் சுவிஸ் நாட்டில் 05.04.2000 அன்று தமிழ் சங்கத்தை தொடங்குவதில் நாம் பெருமை அடைகிறோம். அன்புடன்...... சிவ.அன்பழகன் பொதுசெயலாளர் சுவிஸ் தமிழ் சங்கம்
வியாழன், 22 டிசம்பர், 2011
மலேசியா விமானநிலையத்தில் தமிழில் அறிவிப்பு செய்ய ஏற்பாடு: மலேசிய அமைச்சர் தகவல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக